Monday, August 20, 2012

[lyric] ரெக்கை முளைத்தேன்!


Company Production
சுந்தரபாண்டியன்
பாடல் : ரெக்கை முளைத்தேன்!
இசை : என் ஆர் ரகுநந்தன்
இயக்கம் : பிரபாகரன்
குரல்கள் : GV பிரகாஷ், ஷ்ரேயா கோஷல்
_____________________________

ரெக்கை முளைத்தேன்
ரெக்கை முளைத்தேன்
உனை உடன் வா என்று
வானம் ஏற அழைத்தேன்!

தப்பித் தொலைந்தே
போகத் துடித்தேன்
ஒருவரும் இல்லாத
தேசம் தேடிப் பிடித்தேன்!

எனக்கென பதுக்கிய கனவுகள்
முதன்முறை தரைவிட்டுப் பறக்குது உன்னாலே!
உனக்கென செதுக்கிய இதயமும்
முதன்முறை உயிர் வந்து துடிக்குது உன்னாலே!

எத்தனை வேகம் சென்றாலும்
நிற்பதாய் தோன்றும் உன்னாலே!
இத்தனை பக்கம் வந்தாலும்
வெட்கமே இல்லை உன்னாலே!

கண்களில் மின்னிடும் காதலை... நான்
அன்றே கண்டேன் ஒருமுறை
நெஞ்சில் தேனை பாய்ச்சிட... அதை
நீயே சொன்னாய் மறுமுறை
_________

பகலிலே சுவரை வெறித்தேன்
தெருவிலே தனியே சிரித்தேன்
கழன்றதாய் பேரும் எடுத்தேன் எல்லாம் உன்னாலே!

இரவிலே தூக்கம் தொலைந்தேன்
படுக்கையை சுற்றி அலைந்தேன்
வகுப்பிலே தூங்கி வழிந்தேன் எல்லாம் உன்னாலே!

கட்டம் போட்ட ஒன்றா? - இல்லை
கோடு போட்ட ஒன்றா?
எந்தச் சட்டைப் போட? - என
முட்டிக்கொண்டேன் உன்னாலே!

பச்சை வண்ணப் பொட்டா - இல்லை
மஞ்சள் வண்ணப் பொட்டா
நெற்றி மேலே ரெண்டும் - நான்
ஒட்டிக்கொண்டேன் உன்னாலே!
_________

காற்றிலே முத்தம் வேண்டாம்
வார்த்தையில் அர்த்தம் வேண்டாம்
சுற்றிலும் சத்தம் போடும் ஏதும் வேண்டாமே!

கவிதைகள் கிறுக்கிட வேண்டாம்
கசக்கியும் எறிந்திட வேண்டாம்
எறிந்ததை மீண்டும் பிரித்து சிரித்திட வேண்டாமே!

பாறை மேலே ஏறி - நம்
பேரைத் தீட்ட வேண்டாம்
எல்லை கொஞ்சம் மீற - இனி
அச்சம் ஏதும் வேண்டாமே!

சாலை ஓரத் தேநீர் - அது 
கோப்பை ரெண்டில் வேண்டாம்
பேருந்தேரும் போதும் - இனி
டிக்கெட் ரெண்டு வேண்டாமே!
_________

ரெக்கை முளைத்தே
ரெக்கை முளைத்தே
எனை உடன் வா என்று
வானம் ஏற அழைத்தாய்.

தப்பித் தொலைந்தே
போகத் துடித்தேன்
ஒருவரும் இல்லாத
தேசம் தேடிப் பிடித்தாய்.

இனி இனி - தனித்தனி உலகினில் 
இருவரும் உலவிடும் நிலையே வேண்டாமே
இனி இனி - மனதினில் தேக்கிட
காதல் உண்டாக்கிடும் வலியே வேண்டாமே
ஓரக் கண் பார்வை வேண்டாமே
ஓரடி தூரம் வேண்டாமே
மாறிடும் நேரம் வேண்டாமே
ஊரிலே யாரும் வேண்டாமே

கண்களில் மின்னிடும் காதலை... நான்
அன்றே கண்டேன் ஒருமுறை
நெஞ்சில் தேனை பாய்ச்சிட... அதை
நீயே சொன்னாய் மறுமுறை
________________


5 comments:

Anonymous said...

உனக்கென செதுக்கிய இதயமும்
முதன்முறை உயிர் வந்து துடிக்குது உன்னாலே!... lovely!!!!!

Anonymous said...

@madhankarky.  I watched your videos that u do for ananda vikatan. It is very very interesting and useful . Every time I want to listen more of your interesting piece of information . May be its in your blood . I love every piece of your work . From photography to writing and teaching. I just love your entire family. Haiku !!!!!oh my god!!!!!!!!!!!!!!! Such a cute boy . He need not go to school he can just listen to u , he will be knowledgable . You have made a useful life , you are being carved into such a piece. I am a college student , I will be telling all the information I get from you to my friends , relatives and my nieces nephews. I will surely show u to my next generation and the next. Sometimes I come to twitter just to see your writings . I am inspired , I am motivated , stimulated . I already had the passion for teaching after seeing u I have rooted it. I want all songs to be a hit because of the lyrics and the correct tunes. Don't stop any work of yours . I know you wouldnt because you have so much passion . You dynamic , multitasking and u have a complementing wife( I read her blog too). It is a honour for me if this message reaches  you and u get time reading it.

saraa said...

i was expecting ur work in the most awaited album of the year, " NEETHAANE EN PON VASANTHAM".. I felt low when i didn find your lyrics there.. i m a great fan of yours...My recent love is with the lines in mugamoodi " KANNAM SURUNGIDA NEEYUM; MEESAI NARAITHIDA NAANUM"

Unknown said...

mind blowing lyrics :) i enjoyed. thnx bro

முனைவர் இரா.குணசீலன் said...

இன்றுதான் தங்கள் வலைப்பதிவுக்கு வருகிறேன்..

தங்கள் பாடல்களைத்தொடர்ந்து கேட்டுவருகிறேன் அருமை..

தற்போது விக்கிப்பீயா பக்கத்தின் வழியே தங்கள் வலைப்பக்கம வந்திருக்கிறேன்.

வாழ்த்துக்கள் கவிஞரே.